ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில், ரூ.10 லட்சம் திருடுப்போன வழக்கில், போலீசார் 2 முதியவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.7.28 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (65).

இவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. கடந்த ஒரு வாரமாக இவரது வீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் திருடு போனது. இதுகுறித்து, சத்யமூர்த்தி கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வீட்டில் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட 3 பேர் சேர்ந்து, ரூ.10 லட்சத்தை திருடியது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் கானத்தூர் பகுதியை சேர்ந்த மார்டின்(52), சுந்தர்(62), பாபு(40) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து, ரூ.7.28 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!