தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயராமின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் சின்னாளபட்டியைச் சேர்ந்த ஜெயராம். தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ஜெயராம் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்படி திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஜெயராம் வீட்டில் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் 10 பேர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!