பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் நீரில் மூழ்கி பலி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி பத்மா (வயது 35), குமார் மகள்கள் ராதிகா (22), ரேணுகா (18), வாடமல்லி மகள் சகுந்தலா (14) ஆகியோர் அருகில் உள்ள வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் 4 பேரும் திடீரென மூழ்கியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பத்மா, ரேணுகா, சகுந்தலா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ராதிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!