கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, கோவை வனப்பிரிவு போளுவாம்பட்டி வனப்பகுதி கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பது சாத்தியமில்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக, சுற்றுலாப் பயணிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!