வைகுண்டஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவம் – ஸ்ரீரங்கம்

 

ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 4ம் நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி மாலை தொடங்கியது. திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 4ம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் சிகை அலங்காரம், முத்துச்சரம், காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சூடியபடி தங்கப் பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளினார். அப்போது ரெங்கா, ரெங்கா என கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!