கொரோனா விதிகளை மீறிய மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ வைரல்

முககவசம் அணியுமாறு வலியுறுத்தியதால், காவலரை தாக்கி செல்போனை உடைத்த மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாலை காசி தியேட்டர் அருகே உள்ள காசி எஸ்டேட் இரண்டாவது தெருவில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை உதவி பொறியாளராக பணிப்புரிந்து வரும் வாளவந்தான் என்பதும், இவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் காவலர் சிவகிருஷ்ணன் முககவசம் அணியுமாறு வலியுறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவி பொறியாளர் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை காவலர் சிவகிருஷ்ணன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ய, மேலும் ஆத்திரமடைந்த மாநகராட்சி உதவி பொறியாளர் காவலரை தாக்கியதுடன் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 
Translate »
error: Content is protected !!