விருதுநகர்: ஒட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி உயிரிழப்பு

விருதுநகர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் அருகே ஒட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் படும் காயம் அடைந்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

காடனேரி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது வீடு கனமழையால் நிலைத்தன்மை இழந்து இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் உள்ளே இருந்த 3 வயது மகள் முத்தீஸ்வரி மீது சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் பெற்றோரும் அவர்களது இளைய மகனும் காயமின்றி உயிர் தப்பினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் தாய் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.

Translate »
error: Content is protected !!