முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு.. வினாடிக்கு 3,984 கன அடியாக அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,984 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, 2,974 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தற்போது மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு மொத்தம் 3,984 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் என்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!