திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, தந்தை பெரியாரின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று – திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம் என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!