மருத்துவமனைக்கு போகாமல் தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்.. குழந்தை உயிரிழப்பு

கோவை செட்டி ரோடு அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்(38). இவரது மனைவிக்கு புண்ணியவதி (32). இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமான நிலையில், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குத்தானே வீட்டிலே பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் குழந்தையும் தாயும் மயங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!