டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை

 

ஒமிக்ரான் பீதியால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் தற்போது வரை 263 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!