கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால் தீவிர மனநலப் பிரச்சனையை சந்திக்கும் இளைஞர்கள்

கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால், இளைய தலைமுறையினர் கடுமையான மனநலப் பிரச்சினைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் கவலை, பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் இரட்டிப்பாகிவிட்டதாகவும், வன்முறை, வானிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவை மனச்சோர்வுக்கு முக்கிய காரணங்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் மனநலம் பேண நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என்றும் விவேக் மூர்த்தி அறிவுறுத்தினார்.

Translate »
error: Content is protected !!