இன்று 1404 பேருக்கு கொரோனா! 1411 பேர் சிகிச்சையில் இருந்து குணம்…

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரி எண்ணிக்கை 65,058; இதையும் சேர்த்து மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,21,25,059 ஆகும்.

இன்று கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,404 ஆகும்; இவர்களில் ஆண்கள் 868 பேர்; பெண்கள் 536 பேர். தமிழகத்தில் மொத்தம் கொரோனா தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,83,319 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 4,73,298 பேர். பெண்கள் 3,09,987 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் ஆவர்.

சென்னையில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 380 ஆகும்; இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,411 பேர். மருத்துவமனையில் இருந்து குணமடைந்து மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7,60,617 பேர் ஆகும்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 4 பேர் அடங்குவர். தமிழகத்தில் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 11,722 ஆகும்.

Translate »
error: Content is protected !!