பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
அது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறியதாவது, ‘‘பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனை ஊக்குவிக்க கூடாது. இது போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என– தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.