கும்பாபிஷேகத்தில் தமிழும் இடம் பெற வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில், கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கல்யாணபசுபதிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், கரூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், கும்பாபிஷேக விழாவை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக் கோரியிருந்தார்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் பதிலளிக்குமாறு, உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதற்கு கோயில் நிர்வாகம் பதில் தரப்படாத நிலையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பின்படி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஆட்சேபம் இல்லை. அதேநேரம், இனிவரும் காலங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்றனர்.

அத்துடன், கோவிலில் தமிழிலில் கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!