சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அறிகுறியற்ற பாதிப்புகளை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளாக  சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்நிலையில், அவர்களில் 22 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த புதிய பாதிப்புகளின் மூலம்  சீனாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,989 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!