சுகாதாரத் துறை அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளஇருக்கிறார்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் (22–ந்தேதி) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறார்.

ஒரு மருத்துவராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 2வது கட்டமாக அனுப்பப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்தை (5,08,500 டோஸ்) அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். மாநில மருந்துகள் பாதுகாப்புக் கிடங்கில் இந்த மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 25,008 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே முதல் கட்டமாக சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்ற நிலையில், தற்போது 2ம் கட்டமாக மேலும் 5 லட்சம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

Translate »
error: Content is protected !!