சௌரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவல்

கொல்கத்தா,

செளரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டு திரும்பினார்..

இந்நிலையில் கங்குலிக்கு நேற்று முன்தினம் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கங்குலி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. வியாழன் இரவு நன்கு தூங்கினார். பரிசோதனையில் முக்கியமான அளவுகள் சரியாக உள்ளன. இன்றும் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் இன்று மேற்கொள்வார்கள் என்று மருத்துவமனைத் தரப்பு கூறியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!