தமிழகத்தில் புதிதாக 2,405 பேருக்கு கொரோனா  

தமிழக சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

தமிழகத்தில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 25,28,806 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 49 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால்  இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 33,606 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,006 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 24,65,250 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 29,950 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!