முதல் முறையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது

பகல் பத்து ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரியபெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ஜூன மண்டபத்திலும்,

ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார். சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் 4000 திவ்ய பிரபந்தமானது பகல் பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள்

அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன்பாடப்படும் அதற்காக எங்களிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்கத் தொடங்குவது திருநெடுந்தாண்டகம் ஆகும் ஸ்ரீரங்கம் கோவிலில் 4000 திவ்ய பிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற

திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதிகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்ய பிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள் அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த 14ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பகல் பத்து உற்சவத்தின் போது ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து உற்சவத்தின் பத்தாவது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு பகல்பத்து அர்ஜுன மண்டபத்தில் வந்தடைந்தார். இன்று ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதேசி திருநாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் கடந்து சென்றார்.

நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 26 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை பகல் 1 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 31 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று  25 ஆம்தேதியான இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது.

அதன் பின்னர் ஏழாம் நாளான 31ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவையும், எட்டாம் திருநாள் என ஜனவரி 1-ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி நிகழ்ச்சியும், 10ம் திருநாளான 3ஆம் தேதி தீர்த்தவாரியும், 4ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட பணியாளர்கள் செய்தனர்.

மேலும் வைகுண்ட ஏகாதேசி விழாவையொட்டி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் 5 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து திருமாமணி மண்டபம் எழுந்தருளிய பிறகு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.

 மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் ஜனவரி 4 ஆம் தேதி வரை மூலவர் முத்தங்கி சேவை பரமபத வாசல் திறப்பு ஆகியவற்றிற்கு பக்தர்கள் ஸ்ரீரங்கம் இணையதளத்தில் கட்டணமில்லா தரிசனம் மற்றும் விரைவு தரிசனம் ஆகியவற்றிற்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் முன்பதிவு செய்த நேரத்தில் இருந்து 30 நிமிட நேரத்திற்கு முன்பாக கோவிலுக்கு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!