ஆறெழுத்து முக்கியப்பதவியை தவற விட்ட டிஐஜி

காக்கி கிசுகிசு

––––––––––––––––

தமிழக காவல்துறையில் சமீபத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு பணிக்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்த நேரத்தில் ஏன் அவருக்கு திடீர் மாற்றம் என ஐபிஎஸ்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம். அதற்குரிய காரணத்தை கண்டுபிடிப்பதில் பூதக் கண்ணாடியும் கையுமாக அலைகின்றார்களாம்.

மேலும் முக்கிய ‘ஆறு எழுத்து’ முக்கியத்துறையின் ‘மூன்றெழுத்துப்’ பதவிக்கு ஐபிஎஸ் ஒருவரை நியமிக்க மேலிடத்தில் இருந்து கடும் ‘சிபாரிசு’ செய்யப்பட்டதாம். ஆனால் அவர் அந்த இடத்துக்கு பொருத்தமானவர் இல்லை என்று அந்த ஆறெழுத்து முக்கியப் பதவியில் இருக்கும் ‘முக்கிய தலைமை அதிகாரி’ தலைமைக்கு எடுத்துச்சொல்ல அந்த போஸ்டிங் கேன்சல் செய்யப்பட்டு அவருக்கு டிஜிபி அலுவலகத்தில் மற்றொரு முக்கியப்பதவி வழங்கப்பட்டது என டிஜிபி அலுவலக வளாகத்தில் கிசுகிசுக்கின்றார்களாம்.

Translate »
error: Content is protected !!