இதய துடிப்பை எகிற வைத்து விட்டார்கள்.. பஞ்சாப் கிங்ஸ் அணியை வாழ்த்திய ப்ரீத்தி ஜிந்தா

எங்களுக்கு ஹார்ட் அட்டாக் தருவதை நிறுத்தவே மாட்டார்கள் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் பெற்ற வெற்றியை, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பெருமையுடன் குறிப்பிட்டார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றதும் நிம்மதிபெருமூச்சு விட்ட பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில்.. 

ஆம் இது ஒரு அற்புதமான ஆட்டம்…. நாங்கள் புதிய பெயர், புதிய சீருடையுடன் களம் இறங்கி உள்ளோம். ஆனாலும் போட்டியை பார்க்கும் எங்களுக்கு இதய துடிப்பை எகிற வைப்பதை மட்டும் பஞ்சாப் அணியினர் நிறுத்தமாட்டார்கள் போலும். இது எங்களுக்கு சரியான ஆட்டம் இல்லையென்றாலும் ஆனால் முடிவு எங்களுக்குரியதாக இருந்தது. அனைத்து பஞ்சாப் வீரர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸ் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததையும் பாராட்டியாக வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!