ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

ஊஞ்சலூர் அருகே உள்ள வள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 42). இவர் நேற்று காலை தனது சேலையை துவைத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த கம்பியில் காய போட்டு உள்ளார்.  அப்போது மின் கசிவு ஏற்பட்டு அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Translate »
error: Content is protected !!