ஐ எஸ் எல் கால்பந்து போட்டி: சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா

கோவாவில் நடைபெற்ற .எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னைபெங்களூரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

பெங்களூரு அணி தான் ஆடியுள்ள 16-வது ஆட்டத்தில் 4 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 6-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 3 வெற்றி, 8 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்திலும் உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- .டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.

 

Translate »
error: Content is protected !!