காயிதே மில்லத் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு ஸ்டாலின்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவு

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினேன்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்! அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்! என அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!