தனது மண்ணில் விளையாட மகிழ்ச்சி – பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம்

தென்ஆப்பிரிக்கா அணி 14 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வருகிறது என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்
2009-ம் ஆண்டும் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் இருந்து 2019-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி அணிகள் மறுத்துவிட்டனர்.
2019-க்குப் பிறகு இலங்கை, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடியுள்ளன. இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்வதை உறுதி செய்துள்ளது. இந்த செய்தியால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
Translate »
error: Content is protected !!