தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 1,413 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,416 ஆகும்; இதில், சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 382; தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 841 பேர். பெண்கள் 575 பேர்.இதன் மூலம் மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,86,163 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 69,685; மொத்தம் இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,19,72,030 ஆகும். தமிழகத்தில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,413 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,63,428 பேர்.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 11,747 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!