தமிழகத்தில் இன்று 1534 பேருக்கு கொரொனா! டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,873

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்று 1,534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,74,710 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வந்தது.

இந் நிலையில், இன்றும் 1,534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,74,710 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,68,025 பேர். பெண்கள் 3,06,651 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,655 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 51 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 68,082. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,873 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,51,535 பேர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!