தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  புதிதாக 4,295 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக,  மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் இன்று புதிதாக 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40,192 ஆகும்.  மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 88,56,280 ஆக உள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 90,242. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 6,83,486. மேலும், இன்று கொரோனா  தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,295 ஆகும். இதில் சென்னையில் மட்டும் 1,132.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,594 பேர். பெண்கள் 1,701 பேர்.  இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,005 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,32,708 பேர். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,12,802 பேர். பெண்கள் 2,70,652 பேர். 

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 10,586 ஆகும்.

Translate »
error: Content is protected !!