தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,430 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 393 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கண்டறியப்பட்டுள்ள கொரொனா தொற்று பாதிப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 66,063 ஆகும்; மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,19,30,240 என அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,073 ஆகும்.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,430; இதில் சென்னையில் மட்டும் இன்று 393 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,79,046 ஆகும். இவர்களில், ஆண்கள் 4,70,670 பேர்; பெண்கள் 3,08,342 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் ஆவர்.

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,453 பேர்; மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 7,56,279 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 11,694 ஆக உள்ளது. சென்னையில் மொத்தம் 3843 என அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!