தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனி நபர் மூலம் மனித வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் விசாரணை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் சென்னை ஆர்ஏ புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு ஒரு தபால் வந்தது. அந்த கடிதத்தில், ‘‘தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக திட்டங்கள் நிறைவேற்றி வருகின்றீர்கள். அதனால் நான் மனித வெடிகுண்டாக மாறி விபரீதத்தை ஏற்படுத்துவேன்’’ என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக

அபிராமபுரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கேகே நகரில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் பிரவீண் என்பவரது முகவரியில் இருந்து அந்த கடிதம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. பிரவீணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது தான் அந்த கடிதத்தை அனுப்பவில்லை என அவர் தெரிவித்தார். பிரவீணை பழிவாங்குவதற்காக இது போன்ற கடிதத்தை எழுதினார்களா? அல்லது பிரவீன் இந்த கடிதத்தை எழுதி விட்டு விசாரணையில் பொய் கூறுகின்றாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!