திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கொரோனா தொற்றுக்கு பலி

திமுக எம்.எல்.ஏ.வும்,  சென்னை முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பலியானது, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர், மா.சுப்பிரமணியன். அண்மையில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து மூவரும் சென்னை கிங்ஸ் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மா.சுப்ரமணியன், அவரது மனைவி இருவரும் குணமடைந்தனர்.

கொரோனா தொற்றுக்கு பிறகு அன்பழகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று காலமானார். அவருக்கு வயது 34.

சட்டசபை உறுப்பினரும், திமுக முக்கியப்புள்ளியுமான மா. சுப்ரமணியன் மகன் கொரோனா தொற்று சிகிச்சைக்கு பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது அக்கட்சியினரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் அன்பழகன் மறைவுக்கு வேதனையையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!