திருவாடானையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில்….வேளாண் திட்த்தை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்

திருவாடானையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் வேளாண் திட்த்தை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது;

இராமநாதபுரம் மாவட்டம்: திருவாடானை 4 ரோடு சந்திப்பு சாலையில், திருவாடானை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் வட்டார தலைவர் கோடனூர் கணேசன் தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு, விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவந்துள்ள வேளாண் திட்டத்தை மசோதாவை எதிர்த்தும், டெல்லியில் கடந்த பல மாதத்துக்கு நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தில் உயிரிழத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கட்சியின் சிறப்பு பேச்சாளர் சபாபதி விளக்க உரையாற்றினார். மேலும், இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் வட்டார நகர பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

 

Translate »
error: Content is protected !!