நாகை மாவட்டத்தில் தமிழில் எழுதி பணிசெய்த 12 அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்….கலெக்டர் வழங்கினார்

நாகை,

நாகை மாவட்டத்தில் தமிழில் எழுதி பணிசெய்த 12 அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் பிரவீன் பி நாயர் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகையும் மாவட்ட நிலையில் தமிழில் சிறந்து விளங்கும் அலுவலகத்திற்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப் பெறுகின்றன.

அவ்வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய 12 அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் 2017 ஆம் ஆண்டில் தமிழில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சான்றிதழும் 2018 ஆம் ஆண்டில் தமிழில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலகத்திற்கு கேடயமும் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் .லியாகத் அலி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!