நாம்தவார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மைக்காக ஒரு கோடி ஹரே ராம நாம ஜெபம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி திருநட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ மாதுரீ ஸகீ சமேத ஸ்ரீ பிரேமிகவரதன் சுவாமிக்கு  பூஜை நடைபெற்றது.

இப்போது உள்ள சூழ்நிலை காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நாமத்வார் பொறுப்பாளர் மட்டும் சுவாதி பூஜையைச் செய்தார். உலக நன்மைக்காகவும் எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க வேண்டியும் பக்தர்கள் அவரவர்கள் இல்லத்தில் இருந்து கொண்டே சித்திரை சுவாதி திருநட்சத்திரம் 27-4-2021 முதல் வைகாசி சுவாதி நட்சத்திரம் 24_5_2021 வரை ஒரு கோடி ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை நாள் தோறும் அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்து நாம ஜபம் செய்து 92 45 43 93 44 இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு நீங்கள் செய்த நாம ஜபத்தின்  எண்ணிக்கையை நாள்தோறும் அனுப்பி வைக்கலாம்.

பக்தர்கள் அனுப்பும் நாம ஜபத்தின் எண்ணிக்கையை வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஸ்ரீ மாதுரீ ஸகீ சமேத ஸ்ரீ பிரேமிகவரத சுவாமி திருவடியில் சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்யப்படும் .இந்த நாம ஜபத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் கூறினார்.

Translate »
error: Content is protected !!