பரமக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடத்தை எடப்பாடி காணொலிக் மூலம் திறப்பு

பரமக்குடி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் கூடுதல்  கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பரமக்குடி ,

இராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூபாய் 5 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் உயர் சிகிச்சை கூடுதல் கட்டிடத்தை தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த உயர் சிகிச்சை கூடுதல் கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ஆய்வகம் நுண் கதிர்  சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன் ரத்த சுத்திகரிப்பை பிரிவு மற்றும் 30 படுக்கைகள் வார்டுகள் ஆகியவை லிப்ட் வசதியுடன் காட்டப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!