ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 3 ஆயிரம் பக்தர்களுக்கு கொரோனா

ஹரித்வாரில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கும், 20 பார்வையாளர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஹரித்வார் மருத்துவக் குழுவினர், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அகில பாரதிய அகதா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும், முகக்கவசம் அணியாததாலும் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Translate »
error: Content is protected !!