போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு

செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில், காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டன. பல்வேறு வழக்குகளில் 800 கிலோ கஞ்சா, 14 கிலோ கேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்திருந்தது. இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி – ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்…

வரலாற்றில் இன்று இந்திய வான்படை நாள்

இந்திய வான்படை 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி ‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்திய வான்படை உலகில் 4வது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. இதற்கு இந்தியக் குடியரசுத்…

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிராட்வே, என்எஸ்சி போஸ் சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, திமுக எம்.பி. தயாநிதி மாறன், மேயர் பிரியா,…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜோலார்பேட்டையில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு ஊராட்சியில் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி…

75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மிரில் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மிருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக இவ்வளவு மக்கள் ஜம்மு காஷ்மிருக்கு வருகை தந்துள்ளனர். இது அம்மாநிலத்தின்…

அடுத்த மாதம் 4ஜி சேவையைத் தொடங்கும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 5ஜி சேவையை அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்…

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுக மாடலான ஐபோன் 14 உற்பத்தி, சீனாவில் நடைபெற்றாலும் இந்தியாவிலும் இதன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசு உற்பத்தி துறையினை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை வாரி வழங்குகின்றது. நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றது. இதனால்,…

நில ஆணவங்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க ஒன்றிய அரசு திட்டம்

நாடு முழுவதும் உள்ள நில ஆவணங்களை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கவுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நில வளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா, “தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8…

Translate »
error: Content is protected !!