திருச்செங்கோடு அருகே புதுமணப்பெண் உள்பட 3 பேர் பலி

திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்
திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 29). இவரது மனைவி ஜீவிதா (21). இவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இவர்கள் இருவரும் இன்று காலை கோவிலுக்கு செல்ல வேண்டி காரில் புறப்பட்டனர். காரை ராமகிருஷ்ணன் ஓட்டினார். அருகில் அவரது மனைவி ஜீவிதா அமர்ந்திருந்தார். கார் திருச்செங்கோடு-வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்காய் தோட்டம் பிரிவு அருகில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திண்டுக்கல்லை சேர்ந்த மோட்டார்சைக்கிளில் சுரேஷ் ( 35), சுப்பிரமணி (50) ஆகியோர் பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திருச்செங்கோடு-வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் காரும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் சுரேஷ், சுப்பிரமணி ஆகியோர் கால் துண்டாகி சம்பவ இடத்தில் இறந்தனர். காரில் வந்த ராமகிருஷ்ணன் ஜீவிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பொதுமக்கள் அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஜீவிதா பரிதாபமாக இறந்தார். விபத்தில் மோட்டார் சைக்கிள் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. தீயை பொதுமக்கள் அணைத்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆன 2 நாளில் கணவன் கண்முன்னே புதுமணப்பெண் ஜீவிதா பரிதாபமாக இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!