புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தடைந்தன. அவை மாநில சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அங்கிருந்து தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 2, 68,30,662 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 593 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Translate »
error: Content is protected !!