6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து “சென்னை அணி” அபார வெற்றி

ஐ.பி.எல் 2021 போட்டி: எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் .. கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.. பின் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ்.. 20 ஓவர்களில் 8 விக்கெட்களை  இழந்து 106 ரன்கள் அடித்துள்ளது.. இதில் தீபக் சாஹர் சென்னைக்காக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்..

பின்னர், 107 ரன்களை இலக்காக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட துவங்கியது. பாபி டு பிளெஸ்ஸிஸ் 33 பந்துகளுக்கு 36 ரன்களும், மொயீன் அலி 31 பந்துகளுக்கு 46 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகுத்தனர்.. இதில் டோனி களமிறவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது..

 

 

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!