ஓமனில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உயர்வு

ஓமன் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓமன் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், புதிதாக 880 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.13 லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக இருந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!