தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் தேனி  சிவாஜி நகர் பகுதிகளில் உள்ள எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட பொதுமக்கள் அந்த மூட்டையை திறந்து பார்த்த போது அதற்குள் ஒரு சூலாயுதத்தின் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அந்த

 சூலாயுதம் குறித்து  தேனி காவல் துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று காவல்துறை

தேனி வருவாய் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணி ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சூலாயுதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அது 5 கிலோ 800 கிராம் எடை இருந்தது. அவற்றை பரிசோதித்து பார்த்தனர்.

இதில், அந்த சூலாயுதம் பித்தளை என்று தெரியவந்தது. சூலாயுதம் அங்கு எப்படி வந்தது யார் கொண்டு வைத்தார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. வேறு ஏதேனும் கோவிலில் இருந்து சூலாயுதத்தை திருடிய மர்ம நபர்கள், சம்பவ இடத்தில் போட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!