இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30, 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 47 ஆயிரம் 325 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 38,303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 25 லட்சத்து 60 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,42,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 431 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 43 ஆயிரம் 928 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!