நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று

நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அவர் கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திருப்பியபோது, அவரை வழியனுப்பவும் அவர் வரவில்லை.

இந்நிலையில், இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பிங்கர்போஸ்ட் அருகே உள்ள தனது முகாம் அலுவலகத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!