பெரியகுளத்தில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவால் நோய் பரவும் அபாயம் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வைகை அணை செல்லும் சாலையில் பெரியகுளம் நகராட்சியின்  28, 29 ஆகிய வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிறைந்ததால் சாலையில் கொட்டப்பட்டு வருகின்றது.
தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு இருந்து கடந்த 5 நாட்களாக அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளை எடுக்காத நிலையில் தற்பொழுது கொரோனா நோய் தொற்று பரிசோதனை  மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் மூட்டை மூட்டையாக சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி நோய் தொற்று பருவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Translate »
error: Content is protected !!