கோவை: ஒரே மருத்துவமனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை காந்திபுரம் 5வது தெருவில் ஜீவன் கிளினிக் உள்ளது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.பின்னர் கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களில் 3 டாக்டர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 5 பேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கோவையில் பல மாதங்களுக்கு பிறகு ஒரே பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!