இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றிலுருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்து 1 ஆயிரத்து 482 அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில், 488 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 884 ஆக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10,050 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!