ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் – கோவில் நிர்வாகிகள் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் – பக்தர்கள் அனுமதி மறுப்பு. அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகிகள் பங்கேற்பு
கார்த்திகை மாதம் பௌர்ணமி நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை திருவிழாவானது திருக்கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும், அதன்படி நேற்றையனதினம் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது, தொடர்ந்து இன்றையதினம் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீப விழா இன்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தனமண்டபத்தில் எழுந்தருளி, அங்கு திருமஞ்சனம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார். பின்னர் இரண்டு முறை புறப்பாடாக கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கருடாழ்வார் மண்டபத்தை வந்தடைந்து எழுந்தருளினார்.

அங்கிருந்து தீபமானது கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் 20அடி உயரத்தில் பனை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம்வந்து கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் நம்பெருமாள் திருவந்திகாப்பு செய்யப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

Translate »
error: Content is protected !!