கோரோனோ விதிமுறை மீறியதால் சுரேஷ் ரெய்னா உள்பட 34 பேர் கைது

மும்பையில் நைட் கிளப் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு கிளப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நேரம் செலவிட்டதாக இ்ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே கான், பாடகர் குரு ரந்தவா உள்ளிட்ட 34 பேரை போலீசார் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்தனர்.

மேலும் கிளப்பை திறந்து வைத்திருந்த குற்றத்துக்காக அந்த கிளப்பின் ஊழியர்களும் கைதானார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கிளப்பை திறந்து வைத்திருந்தது, சமூக விலகல், முகககவசம் அணிதல் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் இருந்தது, தொற்று பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது என பல குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.

 பின்னர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். சமீபத்தில் நடந்த .பி.எல். தொடரிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை. ஆனால் தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேச அணிக்காக, சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆட்டத்தில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!